ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரமாக நகராமல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்துக்கு கிழக்கே 40 கிமீ நிலை கொண்டுள்ளது.
இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Cyclonic Storm “FENGAL” [pronounced as FEINJAL] over north coastal Tamil Nadu & Puducherry remained practically stationary during past 6 hours and lay centered at 0530 hours IST of today, the 1st December 2024 over the same region near latitude 12.0°N and longitude 79.8°E,… pic.twitter.com/PSVUqahgEr
— India Meteorological Department (@Indiametdept) December 1, 2024
தற்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்துவருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Moderate rains with occasional intense spells continue over Cuddalore, Kallakurichi and Villupuram districts #CycloneFengal #StaySafe #StayUpdated pic.twitter.com/GBaGJYN1mo
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024
இதையும் படிக்க: சொல்லப் போனால்… மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி
வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.
சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய பென்ஜால் புயல், புதுவை அருகே நள்ளிரவு கரையைக் கடந்ததாக கூறப்படும் நிலையில், புதுவை கடற்கரைக்கு வெளிப்புறப்பகுதியில், தொடர்ந்து 6 மணி நேரமாக புயலாக நிலை கொண்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


