Sorting by

×

அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணி சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக விமர்சித்தனர்.

மார்னஷ் லபுஷேன் வேண்டாம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டியில் மார்னஸ் லபுஷேன் அணியின் பிளேயிங் லெவனில் வேண்டாம் என மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பல இன்னிங்ஸ்களாக ரன்கள் குவிக்கத் தவறும் மார்னஸ் லபுஷேனை, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் பிளேயிங் லெவனில் களமிறக்கக் கூடாது. பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லையெனில், லபுஷேன் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாட அது உதவியாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் விளையாடி அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு முறை மட்டுமே அவர் 10 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார் என்றார்.

இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேனுக்கு முன்னாள் ஆஸி. கேப்டன் அறிவுரை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *