Sorting by

×

அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுதில்லி: அடுத்த சில நாள்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிவிப்பில்,

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று கர்நாடகத்திலும், சனிக்கிழமை வரை மத்திய மகாராஷ்டிரத்திலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கு நாடு முழுவதும் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

மேலும் தில்லியில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்று புதன்கிழமை கனமழை பெய்யக் கூடும், நாளை முதல் அடுத்த 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *