சென்னை: “அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (affiliation) பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக பேராசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும். 224 பொறியியல் கல்லூரிகள் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் ஆவணங்களோடு அம்பலப்படுத்தி உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

