
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக தவெக இதை மாற்றிக் கொள்ள முயலும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


