மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘பொறுப்பு டீன்’ தர்மராஜ் ஒய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக நியமிக்கப்பட்ட இருதயவில் பேராசிரியர் செல்வராணி உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், எம்பிபிஎஸ், எம்டி போன்ற படிப்புகளை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ‘டீன்’ ஆக இருந்த ரெத்தினவேலு ஒய்வு பெற்றார். அவரது பதிலாக பொறுப்பு ‘டீன்’ தர்மராஜ் இருந்து வந்தார். அவரும் ஒய்வு பெற்றநிலையில் புதிய டீன் நியமிக்கப்படாமலே மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக இருதயவில் துறை பேராசிரியரான செல்வராணி நியமிக்கப்பட்டார். இவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

