
சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. கடந்த நிதியாண்டில், தமிழக பொருட்கள் 31 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கடின சூழலில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மத்திய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாக துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


