Sorting by

×

“அமெரிக்க வரி நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன்

திருப்பூர்: “நெருக்கடியில் உள்ள நமது ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *