விழுப்புரம்: தமிழக அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?
திமுக ஆட்சி அமைத்த 07.05.2021ம் தேதி அமைச்சரவையியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக செஞ்சி தொகுதி எம்எல்ஏவான மஸ்தான் பொறுப்பேற்றுக்கொண்டார். 1976ம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர் படிப்படியாக வளர்ந்து 1986ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை செஞ்சி பேரூராட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


