மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து அதிகாரிகள் செயல்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த காஜா மைதீன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், 'மணப்பாறை புத்தாநத்தம் கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்க எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி இருந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

