
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.
வார இதழ் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கு நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 36 பேர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிச.6-ம் தேதி நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க இருந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


