புதுச்சேரி: ஆன்மிக பூமியான புதுச்சேரி மெல்ல மெல்ல கலாச்சார சீரழிவை நோக்கிச் சென்று 3 ஆண்டுகளில் சீரழிவின் உச்சத்துக்கு வந்துள்ளதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அன்பழகன் பேசியது: “புதுச்சேரி மாநிலத்தில் ஏறத்தாழ 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்ட ஒரு மாபெரும் கட்சியின் உறுப்பினர் என்பது நமக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். அதை உணர்ந்து நாம் என்றைக்கும் அதிமுக பொதுச் செயலாளருக்கு விசுவாசமாக நடக்க வேண்டும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

