சென்னை: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரி விண்ணப்பித்தவரை 3 ஆண்டுகளாக அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செஞ்சி தாலுகா பெரியாமூரில் பச்சையப்பன் என்பவரின் தாயாருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ள நிலையில் திடீரென அதில் 96 சென்ட் நிலம் புகழேந்தி என்பவரது பெயருக்கு மாறியிருப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பி பச்சையப்பன் செஞ்சி துணை வட்டாட்சியருக்கு கடந்த 2021 நவ.7 அன்று விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை என்பதால் செஞ்சி வட்டாட்சியிரிடம் முறையீடு செய்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

