சென்னை: ஆவினிடம் பாடம் கற்றுக் கொண்ட கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஆவினோ படு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், இனியாவது ஆவினும், தமிழ்நாடு அரசும் விழித்துக் கொள்ளுமா? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அம்மாநிலத்தில் உள்ள 24 ஆயிரம் கிராமங்களில் சுமார் 27லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 85 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் அங்கு பால் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியிருப்பதன் காரணமாக தினசரி பால் கொள்முதல் தற்போது 1 கோடி லிட்டர் என்கிற இமாலய இலக்கை எட்டி பால் கொள்முதல், பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விற்பனையில் புதியதொரு சகாப்தம் படைத்து தென்னிந்திய மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு முன்மாதிரி நிறுவனமாக மாறியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

