
சென்னை: இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கக் கோரும் விண்ணப்பத்தை முறைப்படி பரிசீலிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணமுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக தனது மனைவி தமிழ்செல்வியுடன் அகதிகளாக கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். சரவணமுத்துவின் தந்தை பழனிவேல் புதுக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர். பின்னர் சரவணமுத்துவும், தமிழ்செல்வியும் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் வசித்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


