சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.
கர்நாடகா, தெலங்கானாவில் மொத்த பட்ஜெட் தமிழகத்தை விட குறைவாக இருந்தாலும், ஐடி துறைக்கு கர்நாடகாவில் ரூ.750 கோடி, தெலங்கானாவில் ரூ.776 கோடி ஒதுக்கப்படுகிறது. குறைந்த நிதியில் தமிழக ஐடி துறை சிறப்பாக செயல்படுவதற்கு, தமிழகத்தில் உள்ள மனித வளத்தின் வெளிப்பாடு தான் காரணம்’’ என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

