
மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார்.
மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. தமிழகத்திலிருந்து திமுக அரசாங்கம் போனால்தான் மக்களுக்கு விடிவுகாலம் வரும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


