
சென்னை: “தமிழக அரசு என்னோடு மோத வழியின்றி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் – மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் போல, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் பணியமர்த்திப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கிய அரசு வருண்குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உள்ளது,” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியனரை கைது செய்த போலீஸார் பெரியமேடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் சீமான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


