Sorting by

×

கடலூரில் விடிய, விடிய கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் விடிய, விடிய கடலூர் மாவட்டம், சிதம்பரம்,பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், அண்ணாமலைநகர், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலாக மழை பெய்தது. கடலூர் புதுச்சேரியி சாலை, காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் சாலை, குள்ளஞ்சாவடி,கடலூர் கே.என் பேட்டை, கடலூர் குண்டுசாலை, கடலூர் ஜட்ஜ் பங்களா ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மழையால் மரங்கள் விழுந்தன. போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொக்லைன் மூலம் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றினர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *