Sorting by

×

கனமழை: சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு

சென்னை புறநகர் ரயில் சேவை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்ஜால் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

எனவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *