சென்னை: கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட திருத்தங்களுடன் கூடிய மதுவிலக்கு சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வருவதை தடுக்க, அரசு வழக்கறிஞர் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலும், குற்றம்சாட்டப்பட்டவர், குற்றமற்றவர் என நீதிமன்றம் கருதும் வரையிலும், ஜாமீனில் வெளியே வரும் நபர் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார் என நீதிமன்றம் கருதும் வகையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்ற முறையில் திருத்தங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனையை தெரிவிக்கிறேன்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

