Sorting by

×

கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சென்னை: கோ​யில்​களில் 5 ஆண்​டு​களுக்கு மேல் பணி​புரி​யும் தினக்​கூலி பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில செயற்​குழு கூட்​டம் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள குறுங்​காலீஸ்​வரர் கோயில் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாநில காப்​பாளர் வி.கண்​ணன் தலைமை தாங்​கி​னார். மாநில துணைத் தலை​வர் எஸ்​.தன​சேகர், மாநில இணை செய​லா​ளர் தாம்​பரம் இரா.ரமேஷ் உள்பட தமிழகம் முழு​வதும் இருந்து பல கோயில்​களில் பணி​யாற்​றும் நிர்​வாகி​கள் மற்​றும் பொறுப்​பாளர்​கள், மகளிர் அணி​யினர் கலந்து கொண்​டனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *