
சென்னை: கோயில் நிலங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்வதற்கு அறநிலையத் துறை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதுதொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவி்ட்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான, அறநிலையத் துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை இணையத்தி்ல் வெளிப்படையாக வெளியிடக்கோரி ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


