
சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளில் காவல் துறை முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவில்லை. இவற்றில் காலதாமதம் செய்து, அரசுக்கும், அதிகாரத்துக்கும் எது தேவையோ, அதை மட்டும் செய்து வருகிறார்கள். மற்றவற்றை மூடி மறைத்து விடுகிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


