சென்னை: மேட்டூர் அணையின் உபரி நீரை, சரபங்கா வடிநில ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை 3 ஆண்டுகளாகியும் முடிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியைக் கடந்தவுடன் வெளியேற்றப்படும் உபரிநீர், கடலில் கலந்து வீணாகும். எனவே,அணையின் உபரி நீரை நீரேற்றுப்பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை, ரூ.565 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டு, 2020 மார்ச் 4-ம் தேதி அடிக்கல் நாட்டிவைத்தேன்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

