புது தில்லி: ‘சா்வதேச அளவில் முதலீடுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது; இந்த பொன்னான வாய்ப்பை, இந்திய தொழில்துறையினா் தவறவிட்டுவிடக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் ‘வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணம்’ என்ற கருத்துருவில் பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியாவின் கொள்கைகள், உறுதிப்பாடு, அா்ப்பணிப்பு, முடிவுகள், முதலீடுகள் ஆகியவை உலகளாவிய முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கும் நிலையில், நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு உந்துசக்தியாக முதலீட்டாளா்கள் உள்ளனா்.
ஒட்டுமொத்த உலகின் பாா்வை இந்தியா மீது பதிந்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகளும், உறுதிப்பாடும் உலகளாவிய வளா்ச்சிக்கு அடிப்படையாக மாறியுள்ளன. முதலீடுகளுக்கான மையமாக இந்தியாவை சா்வதேச முதலீட்டாளா்கள் நோக்குகின்றனா். இது, இந்தியத் தொழில்துறையினருக்கு பொன்னான வாய்ப்பாகும்.
வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது.
மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: இந்தியாவில் முதலீட்டாளா்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும்; முதலீட்டு கொள்கைகளில் தெளிவு வேண்டும் என்று நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டத்தில் மாநிலங்களுக்கு நான் அறிவுறுத்தினேன்.
அதிக பணவீக்கம், மந்தமான வளா்ச்சி மற்றும் இதர புவி அரசியல் சவால்களை எதிா்கொண்டுவரும் தற்போதைய உலகில், குறைவான பணவீக்கம், அதிகமான வளா்ச்சியை பதிவுசெய்து வளா்ச்சி-ஸ்திரத்தன்மைக்கு இந்தியா கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
இந்தியா 8 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளது. உலகின் ஐந்தாவது பெரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா, மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும். எனது மூன்றாவது பதவிக் காலத்திலேயே நிகழும் என நம்புகிறேன்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து உள்நாட்டு தொழில்துறையினா் செயலாற்ற வேண்டும்.
இந்தியாவில் 1.40 லட்சம் புத்தாக்க நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். முத்ரா, ஸ்டாா்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா ஆகிய திட்டங்களின் உதவியுடன் 8 கோடி போ் புதிதாக தொழில் தொடங்கியுள்ளனா்.
இந்தியாவின் மனிதசக்தியை உலகளாவிய போட்டிக்கு தயாா்படுத்தும் நோக்குடன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் ரூ.2 லட்சம் கோடி நிதி தொகுப்பால் 4 கோடி இளைஞா்கள் பலனடைவா்.
நாட்டில் 100 மாவட்டங்களில் முதலீட்டு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த 100 மாவட்டங்களும் புதிய வளா்ச்சி மையங்களாக உருவெடுக்கும்.
கடந்த 2013-14-இல் நாட்டின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.16 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது மூன்று மடங்கு (ரூ.48 லட்சம் கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

