
புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் அங்கிருந்த தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்தியதாக புகார் எழுந்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


