நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம்.
இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கடுமையாகக் கண்காணித்துவருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “பலமுறை எச்சரிக்கப்பட்டதையும் மீறி சில சீனப் பயணிகள் எல்லை தாண்டி சென்று இந்திய ராணுவத்தால் கைது செய்யப்படுகின்றனர்” எனக் கூறியுள்ளனர்.
மேலும், “இந்தியா மற்றும் நேபாளம் குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் எளிதாக எல்லைத் தாண்டி சென்றுவர முடியும் என்றாலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அது பொருந்தாது” எனத் தெரிவித்ததுடன், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது சட்ட விரோதம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர் என்கிறது குளோபல் டைம்ஸ் தளம்.
மேலும் தூதரகத்தின் அறிக்கையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவதனால் ஏற்க நேரிடும் கடுமையான தண்டனைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்செயலாக நுழைந்தாலும் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜாமீன் இல்லாமல் 2 முதல் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
கடந்த மே 29ம் தேதி இரண்டு சீனர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
பீகாரில் பிடிபட்ட அவர்கள், இந்தியாவுக்குள் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து வெளியிட்டதுடன், உரிய ஆவணங்களும் இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் பீகாரின் நேபாள எல்லையான ரக்சௌல் பகுதி வழியாக உரிய ஆவணங்களின்றி ஊடுருவ முயன்ற 4 சீனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர், இமயமலைப் பகுதியில் இருப்பதாக இந்திய ராணுவத்துக்குத் தகவல் வந்ததையடுத்து, இந்தியா – நேபாளம் நாட்டு வீரர்கள் கூட்டுச் சோதனை நடவடிக்கை மற்றும் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி 26 இந்தியர்கள் பஹல்காமில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசு எல்லைகளைக் கவனமாகக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


