Sorting by

×

சென்னையில் செப்.21-ல் மநீம பொதுக்குழு கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, பிப்.9-ம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *