Sorting by

×

சென்னையில் தொடர் மழை: சுரங்கப் பாதைகளின் நிலை என்ன?

சென்னை: சென்னையில் எங்கெங்கே மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சால் புயல் கரை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “வட பழனி மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் நோக்கி செல்லும் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் சாலைகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. மறுபுறம் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்துவருகிறது” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *