சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவது உற்சாகமளிக்கிறது. நம்முடைய விருந்தோம்பல், விளையாட்டு திறமைகளை பார்ப்பதில் ஆவலாக இருக்கிறேன். தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டாகவும் மாற்றியதற்கு தமிழக முதல்வர் மற்றும உதயநிதிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

