
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது. தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு சனிக்கிழமை காலை வந்த சில விரைவு ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. மதுரையில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை மதியம் வந்த வைகை விரைவு ரயில் உள்பட சில விரைவு ரயில்கள் அரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதுபோல, சென்ட்ரல் வந்தடைந்த விரைவு ரயில்களும் சிறிது தாமதமாகின.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


