Sorting by

×

சென்னை பேருந்து நிறுத்தங்களில் சாய்வுதள வசதி சம்பிரதாயத்துக்காக அமைக்கப்படுகிறதா?

சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மாநகராட்சி சார்பில் 750-க்கும் மேற்பட்ட பேருந்து நிழற்குடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில பேருந்து நிழற்குடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்தில் ஏறும் வகையில் சாய்வு தளம் மற்றும் கைப்பிடி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து இடங்களிலும் இந்த கட்டமைப்பு பயன்பாடற்று கிடக்கின்றன. சில இடங்களில் முழு பேருந்து நிழற்குடையும், சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளமும் ஆக்கிரமிக்கப்பட்டு பழக்கடைகளாகவும், பூக்கடைகளாகவும் மாறியுள்ளன. சில இடங்களில் பேருந்துக்கு காத்திருப்போர், அமரும் பகுதியாகவும் மாறியுள்ளது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *