சென்னையில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கு முன்பாக மனித நுழைவு வாயிலுக்கு பதிலாக தூர்வாருவதற்கு வசதியான இயந்திர நுழைவுவாயில் தெருக்களில் ஆங்காங்கே கான்கிரீட் கலவை இயந்திரம் மூலம் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவின் ஒரு பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இயந்திர நுழைவுவாயில்கள் பெரிய தூண்கள்போல நிற்கின்றன. சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும்போது இந்த இயந்திர நுழைவுவாயில்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக `இந்து தமிழ் திசை' நாளிதழில் `ரெடிமேட் மிஷின்ஹோல்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம்' என்றதலைப்பில் கடந்த 14-ம் தேதி செய்தி வெளியானது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

