Sorting by

×

சென்னை | ரூ.50 லட்சத்தில் இறகு பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், அண்ணாநகர் மண்டலம் திருநகரில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட இறகு பந்து உள் விளையாட்டரங்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.

சென்னை மாகநராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் 95-வது வார்டு, வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை, திருநகர் பகுதியில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் புதிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோர் பங்கேற்று இறகு பந்து உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *