
பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வாக அருளும் இருந்து வருகின்றனர். இதில், ராமதாஸுக்கு ஆதரவாக அருளும், அன்புமணிக்கு ஆதரவாக சதாசிவமும் கொடிதூக்கி நிற்கிறார்கள். இந்த நிலையில், சேலத்தில் தங்களது இருப்பைத் தக்கவைக்க அண்மையில் அங்கே, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாமக இளைஞரணிக்கு தளபதியாக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து இளைஞர்களும் அவருக்கு துணை நிற்க வேண்டும். பாமக இளைஞரணி அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாமகவுக்கு சேவை செய்யவே எனது பெரிய மகளை செயல்தலைவராக தந்துள்ளேன்” என்று சொன்னதுடன், “பாமக சார்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு போராட்டம் டிசம்பர் மாதம் நடைபெறும்” என போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


