சென்னை: சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிப்பவர் பிஹார் மாநில தொழிலாளி ராஜேஷ்குமார். இவரது மகன் யுவராஜ் (11). 10 நாட்களுக்கு முன்பு பிஹாரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த26-ம் தேதி வாந்தி எடுத்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருந்தை உட்கொண்டபின், இயல்பாக இருந்ததாகவும் தெரிகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

