சென்னை: தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைதலைவரின் அறிக்கையில் (சிஏஜி) கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணைய தளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழக அரசு தவறிவிட்டது. திட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகளான போதும் இந்த மென் பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் பொறுப்புமையம் இல்லை.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

