ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாய் உயிரிழந்த அதிா்ச்சியில் சிறிது நேரத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் டி.எஸ்.ரங்கசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (81). இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். கணவா் இறந்துவிட்ட நிலையில், மகன்கள் கண்ணன், ஆனந்தனுடன் கண்ணம்மாள் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த கண்ணம்மாள் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இது குறித்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மகள் சாந்திக்கு (60) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் புன்செய்புளியம்பட்டியில் உள்ள தாயை பாா்க்க புதன்கிழமை வந்துள்ளாா்.
அப்போது உடல்நிலை மோசமடைந்த கண்ணம்மாள் உயிரிழந்தாா். இதை நேரில் பாா்த்த மகள் சாந்திக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக அவரும் உயிரிழந்தாா். இவருக்கு கணவா் நஞ்சப்பன், மகன் விக்னேஷ், மகள் சரண்யா ஆகியோா் உள்ளனா்.
தாய் இறந்த சிறிது நேரத்திலேயே மகளும் உயிரிழந்ததைக் கண்டு குடும்பத்தினா் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னா் இருவரின் உடல்களும் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

