
தாம்பரம் மாநகராட்சி பகுதி பெருங்களத்தூர், ராஜகீழ்ப்பாக்கம், பம்மல், அன்காபுத்தூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் வசிப்போர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினார். வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றனர். மழை நீரில் கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் மோட்டர் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


