காரைக்குடி: ‘திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால்தான் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராகி வருகிறது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளாரின் நினைவு மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் தென்னவன், திக மாவட்ட காப்பாளர் சாமிதிராவிடமணி, மாவட்டத் தலைவர் வைகைறை, செயலாளர் செல்வமணி, சொற்பொறியாளர் பிராட்லா, மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

