குமுளி: கேரள எல்லையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக கேரள எல்லையான குமுளி, தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சில நாட்கள் மழை பெய்வதும், அடுத்த சில நாட்கள் மழையின்றியும் காணப்படுவதால் அணைக்கான நீர் வரத்து சீரற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 221 கன அடியாக இருந்த நீர்வரத்து அடுத்தடுத்த நாட்களில் 282, 404, 405 கன அடியாக அதிகரித்தது. நேற்று (ஆக.29) தேக்கடியில் 28.4 மி.மீ மழை பதிவானது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

