நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதன்படி, நாட்டில் தற்போது 3,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரளத்தில் 1,336 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 467 பேரும், தில்லியில் 375பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகத்தில் 234 பேரும், மேற்கு வங்கத்தில் 205பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 117 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்
நேற்று ஒரே நாளில் 685 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரு நாளைக்கு முன்பு கரோனாவுக்கு 7 பேர் பலியாகியிருந்தனர்.
கரோனா சிகிச்சை முடிந்து சுமார் 1,435 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


