
திருத்தணி: திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. நான் ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் உள்ள மனிதநேய தோட்டத்தில் மரங்களுக்கு இடையில் மரங்களின் மாநாடு எனும் தலைப்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் திருவள்ளூர், திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


