சென்னை: “தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பொறுப்பான மூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல,” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று (ஆக.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் 2025 திருநாளையொட்டி, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி சேலை முழுவதையும் விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து வாங்கயிருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலையிழப்பர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 1114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 114 சங்கங்களை சார்ந்த 12,831 கைத்தறி நெசவாளர்கள் மட்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சிய கைத்தறி நெசவாளர்கள் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தைக்கான ரகங்களின் உற்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

