திருநெல்வேலி: “திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய பகுதிகளை இணைப்பது குறித்து அந்தந்த பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் கோ. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது. துணை மேயர் கே. ராஜு, ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டு பிரச்சினைகளை பேசினர். திருநெல்வேலி மாநகராட்சியுடன் சுற்றியுள்ள ஊர்களை இணைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதா என்று பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் எழுப்பிய கேள்விக்கு, “இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் பதில் அளித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


