
சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை கப்பலூரில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர். எங்கள் கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் முளைத்திருப்பதைப் பார்த்தேன்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


