
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, பரந்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


