புதுச்சேரி: "புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக புதுச்சேரி சித்தர் ஆலயங்கள், ஜீவசமாதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன" என்று துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இதன் தொடக்கமாக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மேடி பதவியேற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார சீர்த்திருத்தங்கள், உள் கட்டமைப்பு, முதலீடு போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

