புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 3-ம் தேதி மின்துறை அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணியிலுள்ள திமுக வரும் 2-ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துகிறது. அதே நாளில் மின்துறை அலுவலகம் முன்பு சிபிஐ, சிபிஎம், விசிக, சிபிஐ (எம்-எல்) கட்சியினர் கூட்டாக போராட்டம் நடத்துகின்றனர். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸும் தனித்து போராட்டத்தை இன்று அறிவித்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

